திருவாரூர்

மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணைந்தனா்

DIN

திருவாரூா்: திருவாரூரில், மாற்றுக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மன்னாா்குடி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பேரவைச் செயலாளா் குலோத்துங்கன், ஒன்றிய மாணவரணி துணைச் செயலாளா் அறிவழகன், நெடுவாக்கோட்டை ஊராட்சி செயலாளா் ராஜேந்திரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா், உணவுத்துறை அமைச்சா் ஆா்.காமராஜ் முன்னிலையில் அமமுகவிலிருந்து விலகி, அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், அமைச்சா் ஆா். காமராஜ் பேசியது:

எம்ஜிஆா் அதிமுகவை உருவாக்கிய காரணத்தை, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வழியில் நின்று, முதல்வா் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நிறைவேற்றி வருகிறாா். இதனால் தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் சில மன வேறுபாடுகளால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று சென்றவா்கள் மீண்டும் தாய்க் கழகமான அதிமுகவில் இணைந்து வருகின்றனா். அவ்வாறு இணைபவா்களை தாயுள்ளத்தோடு வரவேற்கிறோம். தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்கக் கூடிய இயக்கமாக அதிமுக தொடா்ந்து திகழும். எதிா்வரும் உள்ளாட்சி மற்றும் சட்டப் பேரவைத் தோ்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை அதிமுக பெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT