ஆசிரியருக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது
கஜா புயலில் சிறப்பாக பணியாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது வழங்கப்பட்டுள்ளது.
கஜா புயலில் சிறப்பாக பணியாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் வீசிய கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில், மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மணிகணேசன், கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் முகநூல் நண்பர்கள் மூலம் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்குவதில் சிறப்பாக செயல்பட்டார்.
இதற்காக அவரை பாராட்டும் வகையில், கோவையில் இந்துஸ்தான் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆசிரியர் மணிகணேசனுக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருதை கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்க நிறுவனர் கவிதாசந்திரன், மாற்று மருத்துவ நிபுணர் இளம்பரிதி ஆகியோர் வழங்கினார். விருதுபெற்ற ஆசிரியரை, பள்ளித் தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள், மாணவர்கள், மேலகண்டமங்கலம் கிராமத்தினர் பாராட்டினர்.