திருவாரூர்

திருவாரூரில் வரவேற்பு

DIN

மன்னார்குடியிலிருந்து திங்கள்கிழமை தோறும் திருவாரூர், சென்னை, விஜயவாடா, நாக்பூர் வழியாக ஜோத்பூருக்கு செல்லும் விரைவு ரயிலின் அனைத்து பெட்டிகளின் அடிப்படை வசதிகளும் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன. 
மேம்படுத்தப்பட்ட இந்த ரயில் சேவை மன்னார்குடியிலிருந்து திங்கள்கிழமை தொடங்கியது. பிற்பகலில் திருவாரூர் வந்த இந்த ரயிலுக்கு திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையொட்டி, பயணிகள், ரயில்வே துறை ஊழியர்கள், போலீஸார் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. 
இதுகுறித்து, சங்கச் செயலர் ப. பாஸ்கரன் கூறியது: இந்த மேம்படுத்த பெட்டிகளின் வாயிலாக பயணிகளின் பயணம் எளிதாக இருக்கும். பெட்டிகளின் தூய்மையும் அதிகளவில் பராமரிக்கப்படும். தென்னக ரயில்வே, படிப்படியாக அனைத்து ரயில்களிலும் பயணிகளின் நலனுக்காக மேம்படுத்தப்பட்ட சேவையை அளிக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

SCROLL FOR NEXT