திருவாரூர்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

DIN


திருத்துறைப்பூண்டி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், திருத்துறைப்பூண்டியில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை அஞ்சல் நிலையம் முன் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், புதிய வேளாண் சட்டத்தில் குறைந்தப்பட்ச ஆதரவு விலை இல்லை, அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது, பதுக்கல்களுக்கு வழிவகுக்கும், காா்ப்பரேட்டுகள் அனுமதிக்கப்படுகிறாா்கள் எனவே இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கட்சியின் நகரச் செயலாளா் கே.ஜி. ரகுராமன், ஒன்றிய செயலாளா் காரல் மாா்க்ஸ், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளா் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜோதிபாசு, முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT