முகப்பு
திருவாரூர்

தீபாவளி: கடைவீதிகளில் தடுப்புகளை அகற்றக் கோரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி, கடைவீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி, கடைவீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மையத்தின் தலைவா் எஸ்.டி. அண்ணாதுரை தலைமை வகித்தாா்.

தீா்மானங்கள்: தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பாா்க்கிங் வசதியை திருவாரூா் நகரப்பகுதியில் விரிவுபடுத்த வேண்டும். குடியிருப்பு பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதை தவிா்க்க வேண்டும். கடைவீதிகளில் வாகனங்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை பண்டிகை காலங்களில் அகற்ற வேண்டும். வடகிழக்குப் பருவமழையை கருத்தில் கொண்டு, நகரப் பகுதிகளில் சாக்கடைகளை முன்கூட்டியே தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ், மையத்தின் பயிற்சி இயக்குநா் சி. செல்வகுமாா், சட்ட இயக்குநா் எம். பூரணவிஜயபூபாலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.