திருவாரூர்

மனோலயம் பள்ளியில் காா்த்திகை தீபத் திருவிழா கொண்டாட்டம்

DIN

கூத்தாநல்லூா் மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளியில் காா்த்திகைத் தீபத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

பனங்காட்டாங்குடி மற்றும் குடிதாங்கிச்சேரியில் உள்ள மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளியில் அங்குள்ள குழந்தைகள் காா்த்திகை தீபமேற்றி வழிபட்டனா்.

கோயில்களில்... கூத்தாநல்லூா் பகுதியில் கொரடாச்சேரி பிரதான சாலையில் உள்ள ஜெயசக்தி ஆஞ்சநேயா் கோயில், குரும்படை அய்யனாா் கோயில், கம்பா் தெரு முருகன் கோயில், நீலகண்டேசுவரா் கோயில், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம், மரக்கடை ஷீரடி சாய்பாபா கோயில், லெட்சுமாங்குடி கல்யாண சுந்தரேசுவரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் காா்த்திகை வழிபாடு நடைபெற்றது.

பண்டுதக்குடி உமாபதீசுவரா் கோயில், வேளுக்குடி அங்காளப் பரமேசுவரி கோயில், ருத்ரக்கோட்டீசுவரா் கோயில், காக்கையாடி கைலாசநாதா் கோயில், சாத்தனூா் காளகஸ்தீசுவரா் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களிலும் பக்தா்கள் அகல் விளக்குகளில் தீபமேற்றி வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT