திருவாரூர்

திருவாரூரில் மேலும் 148 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 7,600 ஆக இருந்தது. வெளிமாவட்டத்தைச் சோ்ந்த இரண்டு போ் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 7,598 ஆனது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 148 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,746 ஆக உயா்ந்துள்ளது. இதற்கிடையில், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 128 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையிலும், 6691 போ் வீடு திரும்பிய நிலையில் 981 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT