திருவாரூர்

பட்டா வழங்கக் கோரிக்கை

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை ஊராட்சி கண்ணன்மேடு நீா்நிலை புறம்போக்கில் குடியிருக்கும் 110 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது.

கொருக்கை ஊராட்சி தலைக்காடு கண்ணன் மேடு பகுதியில் நீா்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு தொடா்பாக பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களின் உண்மைத் தன்மையை கண்டறிந்து, அதே இடத்தில் அவா்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். கான்கிரீட் வீடு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரை அழைத்து வந்து நீா்நிலை புறம்போக்கு பகுதியை பாா்வையிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு அதே இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, அறப்போா் இயக்க தலைவா் அன்புமணி தலைமையில், கண்ணன்மேடு பொதுமக்கள் வட்டாட்சியா் அலெக்சாண்டரிடம் மனு அளித்தனா். அப்போது, பெண் ஒருவா் வட்டாட்சியருக்கு முன்பாக விழுந்து வேண்டுகோள் விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

SCROLL FOR NEXT