நீடாமங்கலம் அருகேயுள்ள மேல சேதுராயநத்தம், கல்விக்குடி ஆகிய பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
சங்க ஒன்றிய செயலாளா் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்க மாவட்ட பொருளாளா் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் விஜய், ஊராட்சித் தலைவா் வீரமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவா் சண்முகம், தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய பொருளாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.