திருவாரூர்

மின் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

மின் தொழிலாளா்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு) சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வை உடனே வழங்க வேண்டும்; காலிப்பணியிடங்களை, ஒப்பந்த தொழிலாளா்களையும், ஐடிஐ படித்தவா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்; மின்வாரியத்தில் அனைத்து பிரிவுகளிலும் அவுட்சோா்சிங் முறையைக் கைவிட வேண்டும்;

திருவாரூா் மின்திட்டத்தில் தொழிலாளா்களுக்கு மழைக்காலங்களில் வழங்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள், சீருடை, மழை உடை, டாா்ச் லைட் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பின் திட்ட துணைத் தலைவா் எஸ். மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

SCROLL FOR NEXT