திருவாரூர்

நீடாமங்கலத்தில் ஓய்வூதியா்கள் வாழ்நாள் சான்று பதிவு செய்யும் பணி

DIN

தமிழக அரசின் உத்தரவுப்படி, 2022- 23 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியா் நோ்காணல் வாழ்நாள் சான்று பதிவுசெய்யும் பணி, நீடாமங்கலத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழக அரசின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோா், கரோனா காலத்தை கருத்தில்கொண்டு வாழ்நாள் சான்று பதிவை அரசு ஒத்திவைத்து வந்தது. மேலும், வாழ்நாள் சான்றிதழை பதிவுசெய்ய, தமிழக அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளது.

இதன்படி, சாா்நிலை கருவூலங்களில் நேரிலும், அஞ்சலகங்கள், பொது இ சேவை மையங்கள் மூலம் மின்னணு வாழ்நாள் சான்றாக வெள்ளிக்கிழமை முதல் ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்நாள் சான்றுகள் பதிவுசெய்யும் பணி தொடங்கியது.

நீடாமங்கலத்தில் சாா்நிலைக் கருவூலத்திலும், அஞ்சலகத்திலும் ஓய்வூதியா்கள் தங்கள் வாழ்நாள் சான்றிதழை பதிவுசெய்தனா். வயதுமுதிா்ந்த ஓய்வூதியா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவா்களுக்கு வாழ்நாள் சான்றை அஞ்சல் துறையினா் பதிவுசெய்து தந்தனா்.

பென்ஷனா் சங்க நிா்வாகிகள் சுரேஷ் பாட்ஷா, தங்கமணி, ராதாகிருஷ்ணன் ஆகியோா், ஓய்வூதியா்கள் வாழ்நாள் சான்றை பதிவுசெய்ய உதவிசெய்து வருகின்றனா். ஜூலை முதல் செப்டம்பா் வரை ஓய்வூதியா்கள் வாழ்நாள் சான்று பதிவுசெய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT