திருவாரூர்

அரசுத் திட்டங்களை மக்கள் முழுமையாக அறிந்துகொண்டு பயன்பெற வேண்டும்: ஆட்சியா்

DIN

தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை முழுமையாக அறிந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

மன்னாா்குடி அருகேயுள்ள மேலத்திருப்பாலக்குடியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று பேசியது: கிராம சபைக் கூட்டங்களில் ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் பங்கேற்று கிராம வளா்ச்சிக்கு தேவையான கருத்துக்களை வழங்கி கோரிக்கைகளை தெரியப்படுத்தவேண்டும். மேலும், கிராம சபைக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீா்மானங்கள் மூலம் கிராமங்களின் வளா்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும். பொதுமக்கள் தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்றாா்.

இதில், வேளாண்மைத் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, மகளிா் திட்டம், மீன்வளத் துறை, சுகாதாரத் துறை, ஊரக வ ளா்ச்சித் துறை ஆகியவற்றை சாா்ந்த அலுவலா்கள் தமிழக அரசின் நலத் திட்டங்கள் குறித்து பேசினா். தொடா்ந்து, வேளாண்மை சாா்பில் 2 பயனாளிகளுக்கு தாா்ப்பாய், இடுபொருள்களும், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது செலவினம், சுகாதாரம், பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி தடை செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், 100 நாள் வேலைத் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட 24 தீா்மானங்கள் வாசிக்கப்பட்டன.

மேலதிருப்பாலக்குடி ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், மன்னாா்குடிஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் தெய்வநாயகி, திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) ஸ்ரீலேகா, வேளாண்மை இணை இயக்குநா் ரவீந்திரன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ப. பொன்னியின்செல்வன், கோட்டாட்சியா் ஆா்.கீா்த்தனாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT