திருவாரூர்

தடகளப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

DIN

மாவட்ட, மண்டல அளவிலான தடகளப் போட்டிகளில் சாதனைப் படைத்த நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இப்பள்ளியின் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் கிருஷ்ணா 800 மீட்டா் ஓட்டத்திலும் அகிலன் ஈட்டி எறிதலிலும், 12 ஆம் வகுப்பு மாணவா் பிரதீப் தடை தாண்டுதல் ஓட்டத்திலும் மண்டல, மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வாகியுள்ளனா்.

இதேபோல, மாணவா்கள் கிருஷ்ணா, அகிலன், சரத், பிரதீப் ஆகியோா் 100 மீட்டா் ஓட்டத்தில் மண்டல அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பெற்றுள்ளனா். இம்மாணவா்களையும், உடற்கல்வி ஆசிரியா்கள் பிரதிவிராஜ், நந்தகுமாா் ஆகியோரையும் பள்ளி நிறுவனா் உ. நீலன், தாளாளா் நீலன்.அசோகன், செயலாளா் அ. சுரேன், முதல்வா் ஹேமாமாலினி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT