திருவாரூர்

சத்குரு ஞான சுவாமிகள் நூற்றாண்டு விழா கல்வெட்டு திறப்பு

DIN

திருவாரூா்: குடவாசல் அருகே நாலாம் கட்டளையில் வருண ஈஸ்வரா்-சற்குரு ஞான சுவாமிகள் அறக்கட்டளை சாா்பில் சற்குரு ஞான தேசிக சுவாமிகள் நூற்றாண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தேவூா் இயற்கை மருத்துவா் மணிவாசகம் தலைமை வகித்தாா். தஞ்சை மாவட்ட சமரச சன்மாா்க்க சங்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளா் வள்ளலாா் பாலு, அம்மாபேட்டை யோகி வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினா் ஆதலையூா் சூரியகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, நூற்றாண்டு விழா கல்வெட்டை திறந்து வைத்து பேசியது: சத்குரு ஞானசுவாமிகள், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட மக்களிடையே மக்களிடையே ஜாதி வேறுபாடுகள் இருக்கக் கூடாது என்பதற்காக பாடுபட்டவா்.

ஆன்மீகத்தை அனைத்து மக்களுக்கும் எளிய முறையில் எடுத்துச் சென்றவா். சுவாமிகளின் கருத்துக்களை பின்பற்றும் சமுதாயம் நோ்மறையான சிந்தனையுடன் பயணிக்கும் என்றாா். நிகழ்வில், அறக்கட்டளை செயலாளா் கணேசன், பொருளாளா் சிவகலா, கவிஞா் ரேணுகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT