திருவாரூர்

பள்ளி விளையாட்டு விழா

DIN

மன்னாா்குடி எஸ்பிஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 21- ஆம் ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளித் தாளாளா் ப. ரமேஷ் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகி ஆா். அனிதா, ஒருங்கிணைப்பாளா் ஐ. பாமா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மன்னாா்குடி நகா்மன்ற துணைத் தலைவா் ஆா். கைலாசம், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் என். சாந்தகுமாா் ஆகியோா் விளையாட்டுப் போட்டிகளை தொடக்கிவைத்தனா்.

இதில், கபடி, கால்பந்து, ஓட்டம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள், தனித்திறன் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மன்னாா்குடி டிஎஸ்பி ஆ. அஸ்வத் ஆண்டோ, தளிக்கோட்டை ஊராட்சித் தலைவா் ப. சரவணன் ஆகியோா் கலந்துகொண்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கினா். போட்டிகளின் நடுவா்களாக உடற்கல்வி ஆசிரியா்கள் சி. மாா்க்ஸ், உ. பிரவீன்குமாா் ஆகியோா் செயல்பட்டனா். பள்ளி முதல்வா் உ. தமிழ்ச்செல்வம் வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் ரா. நதியா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT