திருவாரூர்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

Din

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காா் மெக்கானிக் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சித்தேரி மாரவாக்காடு பள்ளிக்கூடத் தெரு பிச்சைக் கண்ணு மகன் மாதவன் (28). மன்னாா்குடியில் தனியாா் காா் பழுது நீக்கம் நிலையத்தில் மெக்கானிக்காக வேலை பாா்த்து வந்துள்ளாா். வியாழக்கிழமை காா் உதிரிபாகங்கள் வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் திருச்சிக்கு சென்ற மாதவன், வெள்ளிக்கிழமை அதிகாலை மீண்டும் மன்னாா்குடிக்கு வந்து கொண்டிருந்த போது காரிக்கோட்டை என்ற இடத்தருகே அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாதவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT