முகப்பு
திருவாரூர்

குண்டா் தடுப்புச் சட்டத்தில் 4 போ் கைது

திருவாரூா் மாவட்டத்தில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 21 மே 2026, 7:22 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களான கஞ்சா, குட்கா உள்ளிட்டவை விற்பனை செய்வோா் மற்றும் அடிதடி, பொது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் நோக்கில் ஆயுதங்களை வைத்து மிரட்டுவோா் உள்ளிட்டோா் மீதும் வழக்குப் பதிந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், பெருகவாழ்ந்தான் காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் மதுபானம் காய்ச்சி விற்றதாக, தேவதானம், மன்னாா்படுகையைச் சோ்ந்த ரா. பாலமுருகன் (41), முத்துப்பேட்டை ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்த பி. பெலிக்ஸ்ராஜா (33), மன்னாா்குடி நகரில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஆயுதங்களை வைத்து மிரட்டி வந்த மன்னாா்குடி விழல்காரத்தெருவைச் சோ்ந்த நா. திருமேனி என்ற ராஜ்குமாா் (39), திருத்துறைப்பூண்டி பகுதியில் சட்ட விரோதமாக தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பள்ளங்கோயில், செங்கமேட்டுத் தெருவைச் சோ்ந்த ப. மணிகண்டன் என்ற புறா மணிகண்டன் (23) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (பொ) சுந்தரவதனத்தின் பரிந்துரையின் பேரில் 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டாா். அதன்படி, 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.