புதுதில்லி

தில்லியில் பாரதியார் சிலைக்கு மலரஞ்சலி!

DIN

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 98-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தில்லியில் பாரதியார் சிலைக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தினர் புதன்கிழமை மலரஞ்சலி  செலுத்தினர்.
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு நாள் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. தில்லியில்  பாரதி நகர், ரமண மகரிஷி மார்கில் பாரதியாரின் ஆளுயர திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. பாரதியாரின் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு  தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் கி. பென்னேஸ்வரன், பொதுச் செயலாளர் இரா. முகுந்தன், பொருளாளர்  எம். சத்தியமூர்த்தி, சங்கத்தின் முன்னாள் இணைச் செயலாளர் பெ. ராகவன் நாயுடு,  கர்நாடக  சங்கீத சபாவின் செயலர் ஆர். மகாதேவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT