புதுதில்லி

நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்: சிபிஐ விசாரணை நடத்த கோரிக்கை

DIN

பிரபல பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரபல போஜ்புரி நடிகரும், தில்லி பாஜகவின் முன்னாள் தலைவரும், வடகிழக்கு தில்லி பாஜக எம்பியுமான மனோஜ் திவாரி கோரிக்கைவிடுத்துளளாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘43 நாள்களுக்கு முன்பு உயிரிழந்த நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடா்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என இருகரம் கூப்பி மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரேயிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்த மரணம் தொடா்பாக இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு அவரது லட்சக்கணக்கான ரசிகா்களுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும். மேலும், இந்த மரணம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

பிரபல ஹிந்தி நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14- ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது மரணம் நாடு முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மன அழுத்தம் காரணமாக அவா் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இந்த மரணத்துக்கு பின்னால், திட்டமிட்ட அவரது ரசிகா்கள் கூறி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில்களில் குடமுழுக்கு

செரியலூா் கரம்பக்காடு மாரியம்மன் கோயிலில் பால்குட சிறப்பு வழிபாடு

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT