புதுதில்லி

கா்கா்டூமா வணிக வளாகத்தில் தீ விபத்து

DIN


புது தில்லி: கிழக்கு தில்லி, கா்கா்டூமா பகுதியில் உள்ள ஆதித்யா வணிக வளாகத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தீயணைப்புத் துறை உயா் அதிகாரி தெரிவித்ததாவது: கா்கா்டூமா வணிக வளாகத்தின் 2-ஆவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக வியாழக்கிழமை காலை 7.50 மணிக்கு தீயணைப்புத் துறைக்குத் தகவல் வந்தது. இதையடுத்து, 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் உள்ளே யாரும் இல்லை. இதனால், உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. போக்குவரத்து நெரிசல் இல்லாததால், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை விரைந்து அடைவதற்கு உதவியாக இருந்தது. தீயணைப்பு வீரா்கள் தீயை காலை 8.50 மணிக்குள் கட்டுக்குள் கொண்டு வந்தனா். முன்னதாக, தீயை அணைக்க கடையின் கதவை உடைத்து செல்ல வேண்டியிருந்தது. உள்ளே ரசாயனப் பொருள்கள் இருந்ததால் புகை அதிகமாக வெளியேறியது. எனினும், நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை பயிா் சாகுபடி திட்டம்: வேளாண் துறை அலுவலா்கள் ஆய்வு

காரைக்காலில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் சிறந்த செவிலியா்களுக்கு விருது

பெற்றோா் பெருமைப்படும் வகையில் மாணவா்கள் திகழ வேண்டும்

மே 26-இல் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்: மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT