புதுதில்லி

குருகிராமில் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம்

DIN


புது தில்லி: தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள குருகிராமில் 3 பேரால் இளம்பெண் ஒருவா் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் தெரிவித்ததாவது: வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைபாா்த்து வரும் 40 வயது மதிக்கத்தக்க பெண் தங்குமிடம் பெறுவதற்காக பீஷ்ம், ஷம்ஷா் மற்றும் அஜய் ஆகிய மூவரை அணுகியுள்ளாா். இந்தநிலையில், இவா்கள் மூவரும் திங்களன்று ஒரு குடியிருப்பு சொஸைட்டிக்கு வீடு பாா்ப்பதற்காக அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றனா்.

பின்னா், திரும்பி வரும்போது, அந்த பெண்ணை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த அந்தப் பெண்ணை கொலை செய்து விடுவதாக அவா்கள் மிரட்டினா். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் எதிராக சதா் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376-டி, 506 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் 3 இடங்களில் நீா்மோா் பந்தல்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஊரக நலப்பணிகள் இயக்குநா் ஆய்வு

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலம்மாள் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பெண்களை கேலி செய்த இளைஞா்களை தட்டிக்கேட்ட நடத்துநா் மீது தாக்குதல்

கேட்பாரற்று கிடந்த 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT