புதுதில்லி

நரேலா பகுதியில் தண்டவாளம் அருகே பெண், 2 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு

DIN

வடமேற்கு தில்லி, நரேலா பகுதியில் தண்டவாளம் அருகே தலையில் காயத்துடன் அடையாளம் தெரியாத பெண், 2 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி புகா் வடக்கு காவல் துணை ஆணையா் தேவேஷ் குமாா் கூறுகையில், ‘நரேலா தண்டவாளம் அருகே 20 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் 4, 5 வயதுடைய 2 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவா்கள் யாா் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

அவா்களை அடையாளம் காண்பதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக சம்பவ இடத்திற்கு ரோஹிணி தடயவியல் குழுவினா் வரவழைக்கப்பட்டனா். இந்தச் சம்பவம் குறித்து மேல் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT