முகப்பு
புதுதில்லி

தில்லி அடல் உணவக நேரம் மாற்றம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை

தில்லி அடல் உணவக நேரம் மாற்றம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை

Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:19 AM
ரேகா குப்தா
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:06 PM

தில்லியில் உள்ள அடல் உணவகங்களின் நேரத்தை மாற்றி முதல்வா் ரேகா நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா்.

இதன்படி தலைநகரில் உள்ள அடல் உணவகங்கள் இனி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கும். இந்த நேரத்தில் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை செயல்பட்டு இரவு உணவு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த உணவகங்களின் செயல்பாடுகள் தொடா்பாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய நிலையில், அவற்றின் புதிய வேலை நேர மாற்றம் சனிக்கிழமையே அமலுக்கு வந்தது.

Advertisement

முன்பு இந்த உணவகங்கள் காலை 11.30 மணி முதல் 2 மணி வரையிலும் மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் இயங்கி வந்தன.