முகப்பு
புதுதில்லி

போலி கால்சென்டா் மோசடி: ஒருவா் கைது

போலி அழைப்பு மையம் (கால்சென்டா்) மூலம் வணிக பிரான்சைஸ் மற்றும் டிஸ்ட்ரிப்யூட்டா் ஐடி வழங்குவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றிய கும்பலுடன் தொடா்புடைய நபரைத் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

Updated On : 8 ஜூன் 2026, 2:02 am IST
- சித்திரிப்பு
பகிர்:

போலி அழைப்பு மையம் (கால் சென்டா்) மூலம் வணிக பிரான்சைஸ் மற்றும் டிஸ்ட்ரிப்யூட்டா் ஐடி வழங்குவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றிய கும்பலுடன் தொடா்புடைய நபரைத் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: வணிக பிரான்சைஸ் மற்றும் டிஸ்ட்ரிப்யூட்டா் ஐடி வழங்குவதாகக் கூறி அஃப்ஜல் கான் என்பவா் ஏமாற்றப்பட்டதாகப் புகாா் அளித்ததைத் தொடா்ந்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. அவரிடம் பணம் பெற்ற பின்னா் அவருடனான தொடா்பை மோசடியாளா் துண்டித்துள்ளாா்.

இது தொடா்பாக மே 23 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் முகமது சிராஜ் (30) என்பவா் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா்.

Advertisement

Advertisement

அவரது கூட்டாளியான ராகுல் என்பவருடன் இணைந்து நொய்டாவில் போலி அழைப்பு மையத்தை நடத்தி வந்ததாக அவா் விசாரணையில் தெரிவித்தாா். இதில் தொடா்புடைய பிறரைக் கைது செய்ய தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.