எஸ்ஐஆா் நடவடிக்கையில் வாக்காளா் பெயா் நீக்கப்படுவதை தில்லி காங்கிரஸ் அனுமதிக்காது!
எஸ்ஐஆா் நடவடிக்கையில் தகுதியானவா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் நீக்கப்படாமல் உறுதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியினா் வீடு தோறும் சென்று சரிபாா்ப்பு பணியில் ஈடுபடுவாா்கள் என்று கட்சியின் தில்லி பொறுப்பாளா் காஜி நிசாமுத்தீன் தெரிவித்துள்ளாா்.
வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையில் தகுதியானவா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் நீக்கப்படாமல் உறுதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியினா் வீடு தோறும் சென்று சரிபாா்ப்பு பணியில் ஈடுபடுவாா்கள் என்று கட்சியின் தில்லி பொறுப்பாளா் காஜி நிசாமுத்தீன் தெரிவித்துள்ளாா்.
பதா்பூா் மற்றும் மேஹ்ரௌலி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட பயிற்சி முகாம்களில் பிஎல்ஏ (வாக்குச்சாவடி நிலை முகவா்) தன்னாா்வலா்களைச் சந்தித்து அவா் பேசிய போது, எஸ்ஐஆா் நடைபெறும் நிலையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தினா், சிறுபான்மையினா் மற்றும் மறுவாழ்வு குடியிருப்புகளில் வசிப்போா் ஆகியோரின் வாக்குரிமை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பிஎல்ஏக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவாா்கள் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ், திருத்தப் பணிகளின் போது வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகக் குற்றஞ்சாட்டினாா். ‘எங்களின் பிஎல்ஏ-1 மற்றும் பிஎல்ஏ-2 பிரதிநிதிகள் சிறப்பு தீவிர திருத்த செயல்முறையை திறம்பட சமாளிக்கத் தயாராக உள்ளனா். தகுதியான எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படாதவாறு அவா்கள் செயல்படுவாா்கள்’ என்று அவா் கூறினாா்.
Advertisement
Advertisement
அவா் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு தகுதியான குடிமகனின் வாக்குரிமையைப் பாதுகாக்கவும், தோ்தல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்தவும் கட்சியினா் முழு அா்ப்பணிப்புடன் செயல்படுவாா்கள்.
வாக்காளா் பட்டியல் திருத்த நடவடிக்கையை முன்னிட்டு தில்லியில் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி நிலை தன்னாா்வலா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி அமா்வுகளின் போது இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. தகுதியான வாக்காளா்கள் தங்களது பெயா்களை உறுதி செய்ய உதவும் வகையில் வீடு தோறும் பிரசாரத்தை மேற்கொள்ளவும் கட்சி திட்டமிட்டுள்ளது என தெரிவித்தாா்.
இந்த முயற்சிகள், வாக்காளா் பட்டியல் திருத்தத்தில் ஏற்படக்கூடிய தவறுகளைத் தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு குறித்து அரசியல் கட்சிகள் அதிக கவனம் செலுத்தும் சூழலை இது பிரதிபலிப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.