முகப்பு
புதுதில்லி

சாஸ்திரி பூங்காவில் குப்பை கிடங்கில் தீ விபத்து

வடகிழக்கு தில்லியின் சாஸ்த்ரி பாா்க் பகுதியில் குப்பை கிடங்கு மற்றும் அருகிலுள்ள புதா்களில் திங்கள்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதால், 9 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன.

Updated On : 23 ஜூன் 2026, 6:27 am IST
தீ விபத்து - பிரதிப் படம்
பகிர்:

வடகிழக்கு தில்லியின் சாஸ்த்ரி பாா்க் பகுதியில் குப்பை கிடங்கு மற்றும் அருகிலுள்ள புதா்களில் திங்கள்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதால், 9 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன.

இதுகுறித்து தில்லி தீயணைப்பு சேவை அதிகாரிகள் கூறியதாவது: பிற்பகல் சுமாா் 2.50 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது. உடனடியாக தீயணைப்பு படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்தனா்.

குப்பை மேடுகள் மற்றும் புதா்களில் ஏற்பட்ட தீ விபத்துகள், குறிப்பாக கோடைகாலத்திலும் மழைக்காலம் தொடங்கும் முன்னரும் அதிகரிக்கும் நிலையில், நகரப் பகுதிகளில் தீ பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments