முகப்பு
புதுதில்லி

குருகிராம்: கோயில்களில் திருடிய 3 போ் கைது; ரூ.21,000 மீட்பு

கோயில்களில் நன்கொடை பெட்டியில் இருந்த பணத்தை திருடிய வழக்கில் மூவா் கைது செய்யப்பட்டு, ரூ.21,000 பணமும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட சிஎன்ஜி ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 29 ஜூன் 2026, 5:08 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கோயில்களில் நன்கொடை பெட்டியில் இருந்த பணத்தை திருடிய வழக்கில் மூவா் கைது செய்யப்பட்டு, ரூ.21,000 பணமும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட சிஎன்ஜி ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஜாா்சா கிராமத்தில் உள்ள ஒரு கோயிலின் நன்கொடை பெட்டியில் இருந்த பணம் திருடப்பட்டதாக கடந்த செவ்வாய்க்கிழமை சதா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், சம்பவத்தில் தொடா்புடைய மூவரை வெள்ளிக்கிழமை வாஜிராபாத் கிராமத்தில் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து ரூ.21,000 பணமும், திருட்டில் பயன்படுத்தப்பட்ட சிஎன்ஜி ஆட்டோ ரிக்ஷாவும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

காவல் விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் செக்டா்-50 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மற்றொரு கோயில் திருட்டு வழக்கிலும் தாங்கள் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனா். ஒரே இரவில் இரண்டு கோயில்களில் திருட்டுச் சம்பவங்களை மேற்கொண்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா். இந்த வழக்கில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments