கன்னியாகுமரி

குமரியில் மழையால்  சேதமடைந்த சாலை சீரமைப்பு

DIN

கன்னியாகுமரியில் மழையால் சேதமடைந்த  கடற்கரைச் சாலை சீரமைக்கப்பட்டது.
கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து சூரிய அஸ்தமனப் பூங்கா செல்லும் கடற்கரைச் சாலையில் சிலுவை நகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மழையால் சாலையில் விரிசல் ஏற்பட்டது. இவ்வழியே நாள்தோறும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் செல்வதால் இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் இச்சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து விரிசல் ஏற்பட்ட பகுதியில் மணல் நிரப்பும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஓரிரு நாள்களில் இப்பணி முழுவதும் நிறைவடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT