தக்கலையில் ஜெயலலிதா பிறந்ததின பொதுக்கூட்டம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு தக்கலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு தக்கலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
எம்.ஜி.ஆர் சிலை அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் ஜெங்கின்ஸ் தலைமை வகித்தார். கட்சியின், கர்நாடக மாநிலச் செயலர் புகழேந்தி, தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா, முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால், மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலர் லட்சுமணன், மருத்துவர் அணிச்செயலர் டாக்டர் மாதேசன், இளைஞரணிச் செயலர் பொன்ராஜ், வழக்குரைஞர் அணிச்செயலர் சௌந்தர்ராஜ், ஜெயலலிதா பேரவைச் செயலர் ஜெய்சந்திரன், ஒன்றியச் செயலர்கள் லெபோரியஸ், மார்டின் ஜோஸ், பிரதீஸ் குமார் உள்பட பலர் பேசினர். பத்மநாபபுரம் நகரச் செயலர் சாதிக் நன்றி கூறினார்.