கன்னியாகுமரி

மரியா பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

DIN

ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கல்லூரியின் இயந்திரவியல் துறையின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற  இக்கருத்தரங்கை அருள்பணியாளர் டோமி லிபின் ராஜா ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். 
மரியா கல்விக் குழுமங்களின் தலைவர்  ஜி. ரசல் ராஜ்,  துணைத் தலைவர் பி. ஷைனி தெரசா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். கருத்தரங்கில் கூடங்குளம் அணுமின் நிலைய தொழில்நுட்ப அலுவலர் ஏ.வி. சதீஷ்  சிறப்புரையாற்றினார்.
கல்லூரி இயக்குநர் ஹரிஹரசுப்பிரமணி,  பேராசிரியர் தேவ் ஆர். திலீபன், அலுவலக மேலாளர் டேவிட் அருள் தாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். 
இதில் சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ரோபோட்டிக் கண்காட்சி நடத்தபட்டது. கருத்தரங்க ஏற்பாடுகளை இயந்திரவியல் துறைத் தலைவர் ஷிபு செந்தில் லால் தலைமையில் பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT