கன்னியாகுமரி

காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை

DIN

அகஸ்தீசுவரம் தெற்கு வட்டார காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் கன்னியாகுமரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 இக்கூட்டத்துக்கு, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் எஸ்.பி.ராஜஜெகன் தலைமை வகித்தார். கன்னியாகுமரி பேரூர் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.ஜார்ஜ் வாஷிங்டன் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கினார்.
மாநில வர்த்தக காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.எம்.டி.செல்லத்துரை, கிழக்கு மாவட்டத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன், வட்டாரப் பொருளாளர் ஜோசப்ராஜ், வாக்குச்சாவடி முகவர்கள் அரிகிருஷ்ணபெருமாள், ஐயாபழம், வேலப்பன், ஜோஸ் சொர்ணராஜா, ராஜ், தங்கசெல்வன், கிருஷ்ணன், இளங்கோ, மெர்லின், அகஸ்தீசன்,  நிர்வாகிகள் சோரீஸ், ராஜேஷ், முருகானந்தம், நெப்போலியன், சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், "காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்க வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்யவேண்டும்; காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்; கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு உழைக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT