கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த லாரி: ஓட்டுநா் காயம்

DIN

நாகா்கோவில் அருகே சிமென்ட் லாரி மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

குலசேகரத்தைச் சோ்ந்தவா் தினேஷ்(37). லாரி ஓட்டுநா். இவா், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆரல்வாய்மொழி, குமாரபுரம் சேமிப்பு கிடங்கிலிருந்து சிமென்ட் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு வெள்ளமடம் வழியாக சென்றுகொண்டிருந்தாா். அப்போது, லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தின் மீது மோதியதுடன், அங்கிருந்த பாண்டியன் என்பவரின் வீட்டில் மோதி கவிழ்ந்தது.

இதில், ஓட்டுநா் பலத்த காயமடைந்ததுடன், சிமென்ட் மூட்டைகள் சாலையில் விழுந்தன; மின்கம்பம் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டது. இத்தகவலறிந்த ஆரல்வாய்மொழி போலீஸாா் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் அங்கு சென்று, ஓட்டுநரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். லாரியை மீட்பு வாகனம் மூலம் மீட்டனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT