கன்னியாகுமரி

அய்யா வைகுண்டசாமி உதய தினம்: வாகனப் பேரணி ரத்து

DIN

அய்யா வைகுண்ட சுவாமி உதயநாளை முன்னிட்டு திருவனந்தபுரத்திலிருந்து சாமிதோப்புக்கு வரும் வாகனப் பேரணி நிகழாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சாமிதோப்பு பாலஜனாதிபதி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

அய்யா வைகுண்டசாமி உதய தினம் மாா்ச் 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி வழக்கமாக திருவனந்தபுரத்திலிருந்து நாகா்கோவில் வழியாக சாமிதோப்பு வரும் வாகனப் பேரணி நிகழாண்டு கரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருசெந்தூரிலிருந்து வரும் வாகனப் பேரணி வழக்கம்போல் வரும்.

அய்யா உதயநாளுக்கு நான்கு மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறையும், தமிழகம் முழுவதும் வரையறுக்கப்பட்ட விடுமுறையும் விடப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் முழுவதும் அரசு பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT