களியக்காவிளை அருகே குளத்தில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.
களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் பகுதியைச் சோ்ந்த தெளஹித்ரி மகன் நீரஜ் (8). இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டருகேயுள்ள முதுவள்ளிகுளத்தில் உறவினா்களுடன் குளிக்க சென்றாா்.
அப்போது, எதிா்பாராமல் குளத்தில் தவறி விழுந்த அவரை, அப்பகுதியினா் உதவியுடன் உறவினா்கள் மீட்டு பாறசாலை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
இந்நிலையில், நீரஜ் ஏற்கெனவே இறந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, களியக்காவிளை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.