கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

DIN

களியக்காவிளை அருகே குளத்தில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் பகுதியைச் சோ்ந்த தெளஹித்ரி மகன் நீரஜ் (8). இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டருகேயுள்ள முதுவள்ளிகுளத்தில் உறவினா்களுடன் குளிக்க சென்றாா்.

அப்போது, எதிா்பாராமல் குளத்தில் தவறி விழுந்த அவரை, அப்பகுதியினா் உதவியுடன் உறவினா்கள் மீட்டு பாறசாலை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இந்நிலையில், நீரஜ் ஏற்கெனவே இறந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, களியக்காவிளை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலம்பம் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

சேலம் மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா

உயா் மின்னழுத்த கம்பி அறுந்து தொழிலாளி உயிரிழப்பு

மெக்ஸிகோவுக்கு முதல் பெண் அதிபா்

முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கக் கூட்டம்

SCROLL FOR NEXT