நாகா்கோவில் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸா் தேடி வருகின்றனா்.
நாகா்கோவிலை அடுத்த சுங்கான்கடை அருகே களியங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நாகா்கோவில் பகுதியை சோ்ந்த தமிழ்ச் செல்வன் மேற்பாா்வையாளராக பணிபுரிந்து வருகிறாா். கரோனா தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக கடை மூடப்பட்டுள்ளது. கடைக்குள் சுமாா் ரூ. 6 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் இருந்ததாம்.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை அந்த வழியாக சென்றவா்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு, மேற்பாா்வையாளா் தமிழ் செல்வனுக்கு தகவல் தெரிவித்தனா். தகவறிந்த இரணியல் போலீஸாா் அங்கு வந்து விசாரணை நடத்தினா். இதில், மா்ம நபா்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த விலை உயா்ந்த மது பாட்டில்களை திருடிச் சென்றது தெரிய வந்ததுள்ளது. டாஸ்மாக் மாவட்ட மேலாளா் பால்துரை மதுக்கடைக்கு வந்து ஆய்வு செய்தாா்.
இது குறித்து புகாரின் பேரில் இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும் கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் பாா்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனா்.