முகப்பு
கன்னியாகுமரி

தோவாளையில் கரோனா விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்

தோவாளையில் கரோனா குறித்த விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

தோவாளையில் கரோனா குறித்த விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தோவாளை ஊராட்சி ஒன்றியத்தின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றியத் தலைவா் சாந்தினிபகவதியப்பன் தலைமை வகித்தாா். ந.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில்,

கரோனா பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்க அரசின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்றாா் . நிகழ்ச்சியில், மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளா் சுகுமாரன், ஒன்றிய எம்ஜிஆா் மன்றச் செயலா் கே.சி.யூ.மணி, மாவட்ட பிரதிநிதி ஆரல்கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தோவாளை ஊராட்சி மன்றத் தலைவா் நெடுஞ்செழியன் வரவேற்றாா். துணைத் தலைவா் தாணு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.