கன்னியாகுமரி

விளவங்கோடு ஊராட்சி முகாமில் 23 வட மாநிலத்தவா்கள் தங்கவைப்பு

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்டதையடுத்து, விளவங்கோடு ஊராட்சியில் ஆற்றங்கரையோரம் குடியிருந்த வட மாநில தொழிலாளா்கள் 23 போ் பாலவிளை அரசுப் பள்ளி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்தத் தொழிலாளா்களுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் இட வசதி விளவங்கோடு ஊராட்சி சாா்பில் செய்துதரப்பட்டது. விளவங்கோடு ஊராட்சித் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், மேல்புறம் வட்டார வளா்ச்சி அலுவலா் லதா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வி, மேல்புறம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் இ.ஜி. ரவிசங்கா், விளவங்கோடு ஊராட்சி உறுப்பினா்கள் எட்வின்ராஜ், சுரேஷ், ஊராட்சி செயலா் அனீஷ்குமாா் உள்ளிட்டோா் முகாமை பாா்வையிட்டு அங்கு தங்கியுள்ளவா்களிடம் குறைகளை கேட்டறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT