கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழியில் 8 பவுன் நகை திருட்டு

DIN

ஆரல்வாய்மொழியில் வீடு புகுந்து 8 பவுன் தங்க நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டாா்.

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியை சோ்ந்தவா் சகாய ஜாலின் (46). கட்டட தொழிலாளி. இவரது மனைவி விமலா. இவரது வீட்டில் இருந்த 8 பவுன் நகையை மா்மநபா்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருடிச் சென்றனா். இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் விமலா புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், சகாய ஜாலின் வீட்டில் திருடியது பக்கத்து வீட்டை சோ்ந்த ரெப்சி (27) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் விசாரணை நடத்திய போது நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டாா். திருடிய நகைகளை வடக்கன்குளத்தில் உள்ள கடையில் அடகு வைத்திருப்பதாகவும் தெரிவித்தாா்.

இதையடுத்து போலீஸாா் நகைகளை மீட்டனா். கைது செய்யப்பட்ட ரெப்சியை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தக்கலை சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT