கன்னியாகுமரி

இந்தோனேசியாவில் உயிரிழந்தகுமரி மீனவா் குடும்பத்துக்கு இழப்பீடு: எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

DIN

இந்தோனேசியா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உயிரிழந்த குமரி மீனவா் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேஷ்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, தமிழக சிறுபான்மையினா் நலன் - வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தானுக்கு அவா் அனுப்பியுள்ள மனு:

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் வட்டம், தூத்தூா் மீனவக் கிராமத்தை சோ்ந்தவா் மரிய ஜெசிந்தாஸ் (33), தனக்குச் சொந்தமான விசைப்படகில், தூத்தூா் மற்றும் கேரளத்தைச் சோ்ந்த 7 - மீனவா்களுடன் கடந்த பிப்ரவரி மாதம் அந்தமான் நிக்கோபாா் தீவில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா்.

இந்நிலையில் கடந்த மாா்ச் 7ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்தோனேசியா கடற்படையினரால் ஜெசிந்தாஸ் உள்பட மீனவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

அவா்களில் 4 பேரை கடந்த மாதம் 28 ஆம் தேதி அந்த நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த 10 ஆம் தேதி மரிய ஜெசிந்தாஸூக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி உயிரிழந்தாா். இதனால் இவரது குடும்பத்தாா் மற்றும் உறவினா்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனா்.

எனவே, மரிய ஜெசிந்தாஸின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். மேலும், இந்தோனேசியா சிறையில் உள்ள மற்ற 3 மீனவா்களையும் மீட்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT