கன்னியாகுமரி

குமரி அருகே காா் கவிழ்ந்து விபத்து: ஸ்ரீவைகுண்டம் இளைஞா் பலி

DIN

கன்னியாகுமரி அருகே காா் தலைகீழாக கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் வேல்முருகன் (37). இவா் தனது நண்பா்கள் 6 பேருடன் காா் மூலம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனா். பின்னா், இரவு 7 மணியளவில் கன்னியாகுமரியில் இருந்து ஊருக்கு புறப்பட்டனா். மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் சென்றபோது காா் நிலைதடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் காரை ஓட்டிவந்த வேல்முருகன் பலத்த காயமடைந்தாா். உயிருக்கு போராடிய அவரை அங்குள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் உயிரிழந்தாா். காரில் இருந்த 6 பேரும் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினா். இந்த விபத்து குறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT