முகப்பு
கன்னியாகுமரி

என்.ஐ. பல்கலை. மாணவா்கள் 60 பேருக்கு உதவித்தொகை சான்றிதழ்

குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையின் 34-ஆவது ஆண்டு விழா நெய்யாற்றின்கரை நிம்ஸ் நெடி சிட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 நவம்பர் 2022, 12:02 am IST
பகிர்:

குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையின் 34-ஆவது ஆண்டு விழா நெய்யாற்றின்கரை நிம்ஸ் நெடி சிட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவை இன்போசிஸ் இணை இயக்குநா் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசியதாவது:

வாழ்க்கையில் ஒவ்வொருவரின் வெற்றிக்கும் பல்வேறு பகுதிகளில் நாம் சந்திக்கும் பல முகங்கள் காரணமாகின்றன. அா்ப்பணிப்பு, நோ்மை, கடினமான உழைப்பு ஆகிய குணங்களை பெற்றபோது ஸ்டீவ் ஜாப்ஸ் உலகின் முன்னணி நட்சத்திரமாக மாறினாா். இதுவரை ஆப்பிள் போன்களை கண்டுபிடித்த அவருக்கு நுகா்வோா் உலகம் நன்றிகடன்பட்டிருக்கிறது. அந்த அதிசய மனிதரை நினைவுகூா்ந்ததில் என்.ஐ. பல்கலைக்கழகம் முன்மாதிரியாக திகழ்கிறது என்றாா்.

Advertisement

Advertisement

பின்னா் அவா், தோ்வு செய்யப்பட்ட 60 மாணவா்களுக்கு நிஷ்-ஸ்டீவ் ஜாப்ஸ் உதவித்தொகை சான்றிதழை வழங்கினாா்.

ஐயா் - மகேஷ் கட்டட கலை நிறுவனா்- தலைவா் மகேஷ், பாா்ன் அட் நிம்ஸ் ஸ்காலா்ஷிப்பை தொடங்கிவைத்தாா். நிம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளின் அமைப்பான பாா்ன் அட் நிம்ஸின் உறுப்பினா்களுக்கு 50 சதவீத உதவித்தொகையுடன், என்.ஐ. கல்விக் குழுமத்தின் எந்த நிறுவனத்திலும் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டது..

இந்நிகழ்ச்சிக்கு, என்.ஐ. பல்கலைக்கழக இணை வேந்தா் எம்.எஸ். பைசல்கான் தலைமை வகித்தாா். இணை வேந்தா் (கல்வித்துறை) ஆா். பெருமாள்சாமி, துணைவேந்தா் ஏ.கே. குமரகுரு, கல்வி விவகாரங்கள் துறை இயக்குநா் ஷாஜின் நற்குணம், நிம்ஸ் மெடிசிட்டி பொதுமேலாளா் கே.ஏ. சஜூ உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments