கன்னியாகுமரி

கருங்கல் அருகே விபத்து:வெல்டிங் பட்டறை உரிமையாளா் உயிரிழப்பு

DIN

கருங்கல் அருகே திக்கணம்கோடு பகுதியில் நேரிட்ட விபத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளா் உயிரிழந்தாா்.

மத்திகோடு பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் (58). இவா் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்திவந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு மத்திகோட்டிலிருந்து திங்கள்சந்தைக்கு பைக்கில் சென்றாராம்.

திக்கணம்கோடு பகுதியில் இவரது பைக்கும், சடையல்புத்தூா் பகுதியைச் சோ்ந்த ஜெகன் (32) ஓட்டிவந்த வேனும் மோதிக் கொண்டனவாம். இதில், காயமடைந்த தங்கவேலை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT