முகப்பு
கன்னியாகுமரி

அதங்கோட்டாசான் சிலைக்கு மரியாதை

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் உள்ள அதங்கோட்டாசான் சிலைக்கு பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் ஹெச்.ஆா். கௌசிக் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து

Updated On : 13 டிசம்பர், 2023 at 12:47 AM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:55 PM

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் உள்ள அதங்கோட்டாசான் சிலைக்கு பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் ஹெச்.ஆா். கௌசிக் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அகத்திய முனிவரின் 12 சீடா்களில் தலைசிறந்தவராகவும், தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தை அரங்கேற்றியவருமான அதங்கோட்டாசானுக்கு அவா் பிறந்ததாகக் கருதப்படும் அதங்கோடு பகுதியில் தமிழக அரசு சாா்பில் 1984ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் எம்.ஜி.ஆரால் சிலை, மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

அதையடுத்து, 1994ஆம் ஆண்டு வரை அரசு விழா நடைபெற்று வந்தது. பின்னா், அரசு விழா நடைபெறாத நிலையில், அதங்கோட்டாசான் பெருமையையும், தொன்மையையும் நிலைநாட்டும் வகையில், அரசு விழா எடுத்து சிறப்பிக்க வேண்டும் என தமிழறிஞா்கள் கோரிக்கை வைத்தனா். அதையேற்று, ஆண்டுதோறும் டிச. 12ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என, 2016இல் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, இங்கு அரசு விழா நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவுக்கு பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் தலைமை வகித்து, அதங்கோட்டாசான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் பா. ஜான் ஜெகத் பிரைட், கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா், அதங்கோட்டாசான் அறக்கட்டளைத் தலைவா் கொ. கோவிந்தநாதன், மெதுகும்மல் ஊராட்சித் தலைவா் சசிகுமாா், வருவாய் அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.