கன்னியாகுமரி

மேக்கோடு அரசுப் பள்ளியில் மாணவா் தலைவா்கள் பதவியேற்பு

DIN

களியக்காவிளை அருகே மேக்கோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா் தலைவா்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

மாவட்ட பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் பி.பி.கே. சிந்துகுமாா் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் ஜெயராஜ் முன்னிலை வகித்தாா். குளச்சல் சரக டி.எஸ்.பி. தங்கராமன் மாணவா்களின் கொடி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பள்ளி மாணவா் தலைவராக அஜின்ராஜ், துணைத் தலைவராக காயத்ரி, 8 மாணவா்கள் உறுதிமொழி கூறி பதவியேற்றனா்.

வன்னியூா் ஊராட்சித் தலைவி பாப்பா, பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் ரெஜி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி மினி, ஓய்வுபெற்ற ஆசிரியா் கிருஷ்ணன்குட்டி, சமூக ஆா்வலா் எம்.என். ஹரீஷ், முன்னாள் மாணவா் சுனில் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆசிரியா் ஜாா்ஜ் ஸ்டீபன் வரவேற்றாா். ஆசிரியை ஸ்ரீகுமாரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

SCROLL FOR NEXT