முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஐடி, பார்மா பங்குகள் உயர்வு

இன்றைய பங்குச்சந்தைகள் வர்த்தக நிலவரம் பற்றி...

Updated On : 10 ஜூன் 2026, 12:12 pm IST
பங்குச்சந்தை - ANI
பகிர்:

பங்குச்சந்தைகள் 2 நாள் சரிவுக்குப் பிறகு நேற்று(செவ்வாய்) உயர்வுடன் வர்த்தகமான நிலையில் இன்றும் (ஜூன் 10, புதன்) உயர்ந்து வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,988.27 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 601.70 புள்ளிகள் உயர்ந்து 74,515.72 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 161.50
புள்ளிகள் உயர்ந்து 23,403.60 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

Advertisement

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.11 சதவீதம் உயர்ந்தும், ஸ்மால்கேப் குறியீடு 0.39 சதவீதம் சரிந்து வர்த்தகமாகிறது.

நிஃப்டி 50 பங்குகளில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே இந்தியா, டாடா நுகர்வோர் பொருள்கள் ஆகிய நிறுவனங்கள் உயர்ந்துள்ளன.

துறைவாரியாக நிஃப்டி எஃப்எம்சிஜி 1% உயர்ந்தது. ஐடி, பார்மா, தனியார் வங்கிகள், எண்ணெய் & எரிவாயு ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் உலோகம், ஆட்டோ பங்குகள் சரிந்து வருகின்றன.

சென்செக்ஸில் 30ல் 20க்கும் அதிகமான நிறுவனப் பங்குகள் லாபமடைந்து வருகின்றன. ரிலையன்ஸ், இன்போசிஸ், சன் பார்மா, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 பைசா உயர்ந்து 95.54 ஆக உள்ளது.

summary

Stock Market: Sensex at dayhigh, up 550 pts, Nifty near 23,400

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.