பங்குச்சந்தை: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஆட்டோ, வங்கிப் பங்குகள் லாபம்!
பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாவது பற்றி...
வாரத்தின் முதல் நாளான இன்று(மே 25, திங்கள்) பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,135.82 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 902.42 புள்ளிகள் உயர்ந்து 76,317.77 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 251.65
புள்ளிகள் உயர்ந்து 23,970.95 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
Advertisement
Advertisement
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.73 சதவீதம் உயர்ந்தும், ஸ்மால்கேப் குறியீடு 1.26 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.
நிஃப்டி 50 பங்குகளில் ஈச்சர் மோட்டார்ஸ், எட்டர்னல், ஸ்ரீராம் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் உயர்வடைந்துள்ளன.
துறைவாரியாக நிஃப்டி ஆட்டோ பங்குகள் அதிக லாபம் பெற்று வருகின்றன. பொதுத்துறை வங்கிகள், வங்கிகள், நிதி சேவைகள் குறியீடுகளும் லாபமடைந்துள்ளன. ஐடி பங்குகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
சென்செக்ஸில் 30ல் 28 பங்குகள் லாபடமடைந்து வருகின்றன. டிசிஎஸ், சன் பார்மா நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வருகின்றன.