ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை: போலீஸார் விசாரணை
ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளியை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக...
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளியை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே தேவதானத்தை அடுத்த கோவிலூர் தெற்குத் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவர் தெற்கு தேவதானம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். இவரது மகன் கூலித் தொழிலாளியான வின்சென்ட்(45) இவர் ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகளுடன் உள்ள பெண்ணை திருமணம் செய்து வசித்து வந்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் இருந்த நேரத்தில் அங்கு வந்த இரு இளைஞர்கள் வின்சென்ட் உடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் வின்சென்டை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேத்தூர் காவல் நிலைய போலீஸார் அவரது சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக வின்சென்ட் அதே பகுதியைச் சேர்ந்த சின்ன பொண்ணு என்பவருடன் மது அருந்திய போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறில், சின்ன பொண்ணுவை வின்சென்ட் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவரது குடும்பத்திற்கும் முன்பகை நீடித்து வந்த நிலையில், சின்னப்பொண்ணுவின் சகோதரர் ஆனந்தகுமாரும், அவரது நண்பர் கோவர்த்தனன் ஆகிய இருவரும் இணைந்து வீட்டில் இருந்த வின்சென்டை படுகொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடி இருவரையும் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.