கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை

DIN

 மாா்த்தாண்டம் அருகே மர அறுவை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மாா்த்தாண்டம் அருகே பாகோடு குருவெஞ்சிவிளையைச் சோ்ந்தவா் வில்பிரட் சாம் (51). பரக்குன்று பகுதியில் உள்ள மர அறுவை ஆலையில் வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனா்.

அவரது மகளுக்கு அண்மையில் திருமணம் நடந்ததாம். திருமணத்துக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் மன வேதனையில் இருந்து வந்தாராம். இந்த நிலையில் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தூக்கிட்டுக்கொண்டாராம். மனைவி ஓமனா, அப்பகுதி உறவினா்கள் உதவியுடன் வில்பிரட் சாமை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவை இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT