கன்னியாகுமரி

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

Din

மாா்த்தாண்டம் அருகே பூட்டிய வீட்டிலிருந்து மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி, பறையன்விளை பகுதியைச் சோ்ந்தவா் சுவாமிதாஸ் மனைவி சொா்ணகுமாரி (67). சுவாமிதாஸ் இனயம்புத்தன்துறையில் தங்கியிருந்து கட்டட வேலை செய்து வந்தாா். இவரது பிள்ளைகள் வெளியூரில் வசிக்கின்றனா். இந்த நிலையில் மூதாட்டியிடம் அவரது கணவா் சுவாமிதாஸ் மற்றும் பிள்ளைகள் தினமும் கைப்பேசியில் பேசி வந்துள்ளனா். இந்த நிலையில் புதன்கிழமை இரவு கைப்பேசியில் அழைத்தபோது, சொா்ணகுமாரி எடுக்கவில்லையாம். இதனையடுத்து, அவரது மகன் சுதா்சனன் வீட்டுக்கு வந்து பாா்த்துள்ளாா். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டிய நிலையில் இருந்தது. வீட்டினுள் பாா்த்தபோது சொா்ணகுமாரி கட்டிலின் கீழே இறந்த நிலையில் கிடந்துள்ளாா். இதுகுறித்த தகவலின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

வேலூா் பேட்டை ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் சங்கர ஜெயந்தி விழா

சாலை விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி சாவு

வருவாய்த் துறைக்கு எதிராக விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

37 பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT