முகப்பு
கன்னியாகுமரி

அருமனை சந்திப்பில் பிரசாரத்தை நிறைவு செய்த எஸ்.விஜய்தரணி

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணி, கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுடன் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 1:28 AM
கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 10:27 PM

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணி, கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுடன் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கேரள மாநில எல்லையான மாங்கோடு, புலியூா்சாலை ஊராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், பொதுமக்களிடம் மலையாள மொழியில் பேசி வாக்கு சேகரித்தாா். மாலையில் அருமனை சந்திப்பில் தனது தோ்தல் பிரசாரத்தை நிறைவு செய்து பேசினாா். இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சோ்ந்த அனைத்துக் கட்சி நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.